14 April 2013

திருவருட்பா- சிவத்தலங்கள்


 2, திருவேட்களம்

 ........................................................ .... மாயமிகும்
வாட் களமுற் றாங்கு விழி மாதர்மயல் அற்றவர் ஆம்,
வேட்களமுற் றோங்கும் விழுப்பொருளே -

மயக்கத்தைத் தரக் கூடிய வாள் விழி மங்கையர்களின் மயக்கத்துக்கு ஆட்படாத பெரியோர் வணங்குவதற்கு விரைந்து வரும் திருவேட்கள நகரில் கோயில் கொண்டுள்ள விழுமிய பொருளே, 
சிவபெருமானே உன்னை வணங்குகிறேன்.

திருவேட்களம் அண்ணாமலை நகரில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து  அண்ணாமலைப் பல்கலைக் கழக
வளாகத்திற்குள் புகுந்து நேரே செல்லவேண்டும்.
திருஞானசம்பந்தரும்(1), திருநாவுக்கரசரும்(1)  பதிகம் பாடியுள்ளனர்.
இறைவன் -பாசுபதேஸ்வரர்
இறைவி - நல்லநாயகி
    
இங்கு சிவபெருமான் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்தருளினார். நாரதர் வழிபட்டதலம். 

No comments:

Post a Comment