21 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருசாய்க்காடு

                                                 -வலிக்கா இல்
பாய்க்காடு கின்றவொரு பச்சை முகில் பரவும்
சாய்க்காடு மேவும் தடங்கடலே -

வலிமையுடைய கால் இல்லாத
பாம்பணையில் சாய்ந்து அசைகின்ற பச்சைநிற மேக வண்ணனாம் திருமால்
வழிபாடு செய்கின்ற திருச்சாய்க் காட்டில் கோயில் கொண்டுள்ள அருட் கடலே
உன்னை வணங்குகிறேன்.

இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் சாலையில் உள்ளது. சாயாவனம் என்று
அழைக்கப்படும் இத்தலம் காசிக்கு சமமானது.திருவெண்காடு, மயிலாடுதுறை,
திருவிடைமருதூர், திருவையாறு, ஶ்ரீவாஞ்சியம் ஆகிய தலங்களும் காசிக்கு
சமமானவை. சம்பந்தர் இரு பதிகங்களும், அப்பர் இரு பதிகங்களும் பாடியுள்
ளனர்.

இறைவன் : சாயாவனேஸ்வரர்
இறைவி    : குயிலினும் நன்மொழியம்மை
தீர்த்தம்     : காவிரி

பஞ்சாய்க் கோரை இங்குக் காடுபோல் பெருகி இருந்ததால் 'சாய்க்காடு'
எனப்பட்டது என்பர்.

திருஅருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

No comments:

Post a Comment