27 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள் - 15

திருக்கோலக்கா

                                                      - ஓர்காழிப்
பாலற்கா வன்று பசும் பொன்தா ளங்கொடுத்த
கோலக்கா மேவும் கொடையாளா -

ஒப்பில்லாத சீர்காழிப் பதியில் தோன்றிய பாலனாகிய
திருஞானசம்பந்தருக்கு அன்று தூயதங்கத்தாலான தாளத்தைக்
கொடுத்து அருள் புரிந்த 'திருக்கோலக்கா' என்ற பதியில்
வீற்றிருக்கும் கொடை வள்ளலே, உன்னை வணங்குகிறேன்.

இத்தலம் சீர்காழிக்கு அருகில் 1 கி. மீ தொலைவில் உள்ளது.
சிறுவனான திருஞானசம்பந்தர் தாளம் கொட்டிப் பாடுவதைப்
பொறுக்காத சிவபெருமான் திருவைந்தெழுத்து பொறித்த
பொன் தாளத்தை  இப்பதியில் அவருக்குத் தந்து அருள்புரிந்தார்.
இறைவி அதற்குத் தெய்விக ஓசையைத் தந்தருளினார். சீர்காழி
நகருக்குள் சிவன் கோவிலுக்கு மேற்கில் இரண்டு கிலோ
மீட்டர் தொலைவில் தாளமுடையார் கோயில் இருக்கிறது.
சம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் ஆக
இரண்டு பதிகங்கள் உள்ளன.
இறைவன் : சத்தபுரீஸ்வரர்
இறைவி    : ஓசைகொடுத்த நாயகி.
(தாளம் என்பது கைத்தாளக் கருவி - timing in music)
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

No comments:

Post a Comment