4 April 2013

திருவருட்பா - சண்முகர் வருகை


வாரும் வாரும் தெய்வ வடிவேல் முருகரே

வள்ளி மணாளரே வாரும்

புள்ளி மயிலோரே வாரும்.  1

சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று

சண்முக நாதரே வாரும்

உண்மை வினோதரே வாரும்.  2

பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று

பொன்னான வேலரே வாரும்

மின்னார்முந் நூலரேவாரும்.  3

                    - திருவருட்பிரகாச வள்ளலார்

No comments:

Post a Comment