19 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

தென் திரு முல்லை வாயில்

                                                                      - கயேந்திரனைக்
காயலுறா  தன்றுவந்து  காத்தோன் புகழ்முல்லை
வாயிலின்  ஓங்கு  மணிவிளக்கே -

யானைகளின் அரசன் கஜேந்திரனைக்  கருணையால் காத்து 
உதவிய திருமால் துதிக்கும் திருமுல்லைவாயில் என்ற தலத்தில் 
வீற்றிருக்கும்  ஒளி பொருந்திய மணிவிளக்கானவனே, உன்னை
வணங்குகிறேன்.

கஜேந்திர மோட்ச வரலாறு: ஆகாயத்தை அளாவி உயர்ந்த  திரிகூடமலைக்
காடுகளில் யானைக் கூட்டங்களுக்கு  எல்லாம் இந்திரன் (தலைவன்) ஆன 
ஓர் ஆண்யானை வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அங்குள்ள தாமரை மலர்கள் 
நிறைந்த பெரிய குளத்தில் யானைகள் எல்லாம் இறங்கி விளையாட, அங்கு
வெகுகாலமாக வசித்து வந்த முதலை கோபம் கொண்டு யானையின் காலைக் 
கவ்விக்கொண்டது. ஆயிரம் ஆண்டுகள் விடுபட முடியாது தவித்த யானை, முற்பிறவி
வாசனையால் ''ஹே ஆதிமூலமே , என்னைக் காப்பாற்று'' எனப் பிரார்த்தித்தது.

யானையின் அபயக் குரல் கேட்ட விஷ்ணுமூர்த்தி கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியவராய்
கருடன் மீது அமர்ந்து வந்து யானையைக் காப்பாற்றினார் என்பது வரலாறு.

இத்தலம் ' திருமுல்லை வாசல்' என்று அழைக்கப்படுகிறது. 
சீர்காழியிலிருந்து 13 கி. மீ.தொலைவில் உள்ளது.
 திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

இறைவன் : முல்லைவனநாதர்
இறைவி    : கோதையம்மை
தலமரம்     : முல்லை

இந்திரனும், கார்க்கோடகனும் வழிபட்டதலம்.  

No comments:

Post a Comment