31 March 2013

திருவருட்பா - பிரார்த்தனைமாலை


போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும்
புவி நடையாம்
சேற்றே விழுந்து தியங்கு கின்றேனைச்
சிறிதும் இனி
ஆற்றேன் எனது அரசே அமுதே என்
அருட்செல்வமே
மேற்றேன் பெருகு பொழில் தணிகாசல
வேலவனே.                  -திருவருட்பிரகாசவள்ளலார்
                                 

பொருள்: என் அரசே, அமுதமே, என் அருளாகிய செல்வமே! தேன் பெருகி வழியும் சோலைகளை உடைய திருத்தணிகை மலை வேலவனே, உலக வாழ்வாம் சேற்றிலே அறிவு மயங்கி வீழ்ந்து உன்னைப் போற்றாதிருந்த  என் குற்றத்தைப் பொறுத்து அருள் செய்ய வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment