1 March 2013

திருஅங்கமாலை - தேவாரம்

(தொடர்ச்சி)

நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்.

கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழீர்.

ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து
பூக்கை யாலாட்டிப் போற்றி யென்னாதவிவ் ஆக்கை யாற்பயனென்

கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென்

உற்றா ராருளரோ - உயிர் கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக் குற்றா ரருளரோ

இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா  னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங் கிறுமாந் திருப்பன்கொலோ

தேடிக் கண்டுகொண்டேன் - திரு மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.
                                                                                 - அப்பர்

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment