2 March 2013

அப்பர் தேவாரம் - திருவையாறு

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது

காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment