7 March 2013

திருப்புகழ் - வேல்வகுப்பு


திருத்தணியில்  உதித்தருளும்  ஒருத்தன்மலை
விருத்தனென  துளத்திலுறை  கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.
                                       
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு  புறத்துமரு  கடுத்திரவு   பகற்றுணையதாகும் - திரு

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர்  சிவத்ததொடை யெனச்சிகையில்  விருப்பமொடு சூடும் - திரு

திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும்  உடைப்படைய  அடைத்துதிர நிறைத்துவிளை யாடும் - திரு

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும் - திரு

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும் -திரு

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே - திரு

திருச்சிற்றம்பலம்                                                   --அருணகிரிநாதர்




No comments:

Post a Comment