23 March 2013

அப்பர் தேவாரம்


சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்

தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

நலந்தீங்கிலு முன்னை மறந்தறியேன்

உன் நாமம் என்நாவில் மறந்தறியேன்

உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்

உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்

அலந்தேனடி   யேனதி கைக்கெடில

வீரட்டா னத்துறை யம்மானே.

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment