7 March 2013

திருப்புகழ் - வேல்வகுப்பு


திருத்தணியில்  உதித்தருளும்  ஒருத்தன்மலை
விருத்த னெனதுளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு - மறத்தைநிலை காணும்
                                                                                         - திருத்தணியில்

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை - கழற்குநிக ராகும்
                                                                                          - திருத்தணியில்

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை - விதிர்க்கவளைவாகும்
                                                                                             - திருத்தணியில்

திருச்சிற்றம்பலம்                                             - அருணகிரிநாதர்


No comments:

Post a Comment