5 March 2013

திருப்புகழ் - வேல் வகுப்பு

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தனென துளத்திலுறை  கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே

சுரர்க்குமுநி  வரர்க்குமக  பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர்  தமக்குமுறும் இடுக்கண்வினை சாடும் - திருத்தணி

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்ப அலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும் -  திருத்தணி

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கொர் துணை யாகும் - திருத்தணி

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment