10 March 2013

சிவத்தியானம் - அகவல்

சிவாயநமவென்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.
திருச்சிற்றம்பலம்

பிரமமே பிரமப் பெருநிலை மிசை யுறும்
பரமமே பரம பதந்தரும்  சிவமே

அவனோடு அவளாய் அதுவாய் அலவாய்
நவமா நிலைமிசை  நண்ணிய சிவமே

எம்பொருளாகி எமக்கு அருள் புரியும்
செம்பொருளாகிய சிவமே சிவமே

ஒருநிலை இதுவே உயர்நிலை எனும் ஒரு
திருநிலை மேவிய சிவமே சிவமே

மெய் வைத்து அழியா வெறு வெளி நடுவுறு
தெய்வப் பதியாம் சிவமே சிவமே

புரைதவிர்த்து எனக்கே பொன்முடி சூட்டிச்
சிரமுற நாட்டிய சிவமே சிவமே

கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்
செல்வமும் அளித்த சிவமே சிவமே - திருஅருட்பிரகாச வள்ளலார்


No comments:

Post a Comment