1 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கோளிலி
                                  - நெல்சுமக்க
ஆளிலைஎன்று ஆரூர னார்துதிக்கத் தந்தருளும் 
கோளிலியின் அன்பர்குலம் கொள்ளுவப்பே -

குண்டையூரில்  தாம்பெற்ற  நெல்லைச் சுமக்க ஆள் இல்லை என்று நம்பியாரூரர் திருக்கோளிலிப் பெருமானைத்  துதித்தார்.
'நீள நினைந்தடி யேன்உமை நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மட வாளவள் வாடி வருந்தாமே
கோளிலி யெம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை யெம்பெருமா னவையட்டித் தரப்பணியே'

சிவபெருமானும் பூத கணங்களைக் கொண்டு அந்த நெல்லைத் திருவாரூர் கொண்டு சேர்த்தார்.
அதனால் கோளிலிப் பெருமானை அன்பர் கூட்டம் உவகையுடன் வழிபட்டு மகிழ்கிறது.
திருக்குவளை என வழங்கப்படும் இத்தலம் திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் சாலையில் உள்ளது. நவக்கிரகங்களுக்கு உண்டான குற்றங்களை நீக்கி அருளியதால் கோளிலி என்று பெயர் வந்தது. (கோள்- கிரகம்)
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி  

No comments:

Post a Comment