24 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

வெஞ்சமாக்கூடல்

                              - தங்குமன
வஞ்சமாக் கூடல் வரையா தவர்சூழும்
வெஞ்சமாக் கூடல் விரிசுடரே -
மனிதனுக்கு முதல் எதிரியாக விளங்குவது அவனுடைய மனம்தான். வள்ளல் பெருமான் மனதைப் பற்றி
பல இடங்களிலும் பாடியுள்ளார். 'தெய்வமணிமாலை'யில் மனத்தை ஒரு சிறுவனாக உருவகிக்கிறார்.
மனமாகிய சிறுவன் என் சொல்லைக் கேட்க மாட்டான், கைக்கு அகப்படவும் மாட்டான். அவனை அடக்க என்னால் முடியாது.நீதான் எனக்குத் துணை செய்ய வேண்டும் என்பார். மிக மிக அழகான பாடல் அது.

வஞ்சம் செய்யும்  மனம் தீய நினைவுகளோடு கூடுகிறது. அந்தக் கூடலுக்கு இடம் தராதவர்கள்
வெஞ்சமாக்கூடலில்  ஒளிமயமாய்க் காட்சியளிக்கும் சிவபெருமானைத் துதிக்கிறார்கள்.
இவ்வூர் வெஞ்சமாங்கூடலூர் என்று வழங்கப்படுகிறது. சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment