8 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருஆப்பனூர்

                                 - சீலர்தமைக்
காப்பனூர் இல்லாக் கருணையால் என்றுபுகும்
ஆப்பனூர் மேவுசதா னந்தமே -

நல்ல ஒழுக்கம் உடையவர்கள் கருணை மிகுதியால் தங்களைத் துன்பங்களிலிருந்து காப்பாற்றுவான் என்று திருஆப்பனூர் சிவனிடம் தஞ்சமடைவார்கள். ஆப்பனூர் சிவன் எத்தகையவன்? எப்போதும்
நீங்குதல் இல்லாத ஆனந்தமயமாய் இருப்பவன்! அவனுடைய அன்பர்களும் ஆனந்தமாக இருப்பார்கள். இக்கோயில் திருவாப்புடையார் கோயில் என்ற பெயரில் மதுரை நகரின் வைகை வடகரையில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


No comments:

Post a Comment