2 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாய்மூர்
                                  - நீளுலகம்
காய்மூர்க்க ரேனும் கருதிற் கதிகொடுக்கும்
வாய்மூர்க்கு அமைந்த மறைக்கொழுந்தே -

துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்பது பழமொழி! இவ்வுலக மக்கள் மூர்க்கர்களை வெறுக்கிறார்கள். இந்த மூர்க்கர்கள்  மனதில் உண்மையுடன் இறைவனை நினைப்பரேயானால்
அவர்களுக்கு நற்கதி கிடைக்குமா?  திருவாய்மூரில் மறைகளாலும் போற்றிப் புகழப்படும் சிவனை
வழிபட்டால் மூர்க்கருக்கும் நற்கதி கிடைக்கும் என்கிறார் வள்ளல் பெருமானார்.

இவ்வூர் திருக்குவளைக்குத் தென்கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment