13 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

இராமேசுவரம்

                                     - சித்தாய்ந்து
நாம் ஈச ராகும் நலந்தருமென்று உம்பர் தொழும்
ராமீசம் வாழ்சீவ ரத்தினமே -

தேவர்கள் இராமேசுவரத்து ஒப்புயர்வற்ற ரத்தினமான சிவனைத் தொழுகிறார்கள்.
எதற்காக? தாங்களே இறைவனாகும் தகுதியை அவன் தருவான் என்ற நம்பிக்கை!
ராமீசம் -இராமேசுவரம். இது ஒரு தீவு. இராமன் பூசித்த காரணத்தால் இராமேசுரம்
எனப்படுகிறது.

பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் இது ஒன்று.கோயில் 865 அடி நீளம் உடையது.மிக அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ள கோயில்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment