21 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

சேரநாடு - திருஅஞ்சைக்களம்
                                                - வல்வேலை
நஞ்சைக் களத்துவைத்த நாதனெனத் தொண்டர்தொழ
அஞ்சைக் களம்சேர் அருவுருவே -

பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது தோன்றியது ஆலகாலவிஷம்.
இந்த விஷத்தைக் கழுத்திலே தாங்கிய தலைவன் எனத் தொண்டர்கள் தொழ
அஞ்சைக்களம் எனும் திருத்தலத்தில் அருவமாகவும் உருவமாகவும் வீற்றிருக்கும்
இறைவனே உம்மை வணங்குகிறேன்.

சேரநாட்டுத் தலம்.ஶ்ரீ வாஞ்சிக்குளம் என வழங்கப்படுகிறது. சுந்தர மூர்த்தி நாயனார்
வெள்ளை யானையின் மீதும், அவருடைய தோழர் சேரமான் பெருமாள் நாயனார்
குதிரையின் மீதும் ஏறிக் கைலாயத்திற்குச் சென்ற தலம் .

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment