16 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பூவணம்
                                 - மோனருளே
பூவணமும் பூமணமும் போல அமர்ந்ததிருப்
பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே -

தங்கள் யோக சக்தியால் மோன நிலையை அடைவர் ஞானிகள். அவர்கள் தங்கள் இதயத்தில் இறைவனை அழகிய பூவின் நிறமும், மணமும் இரண்டறக் கலந்து விளங்குவது போலக் காண்கிறார்கள். அது போல திருப்பூவணம் என்ற திருத்தலத்தில் அடியார்கள் இதயத்தில் ஆனந்தம் தரும் பொக்கிஷமாய் இரண்டறக் கலந்து விளங்குகிறான் சிவபெருமான்.

இவ்வூர் வைகையின் தென்கரையில் உள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவருக்கும்
வைகை மணல் சிவலிங்கமாகத் தோன்றியதால் மூவரும் இத்தலத்தை மிதிக்காது மறுகரையில் இருந்தே இறைவனை வணங்கினராம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா, 203.
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


No comments:

Post a Comment