28 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

நடுநாட்டுத்தலங்கள் - திருவரத்துறை
                                          - தங்களற்றின்
தீங்கார்  பிறதெய்வத் தீங்குழியில் வீழ்ந்தவரைத் 
தாங்கா அரத்துறையில் தாணுவே -

அளறு என்றால் நரகம். நல்ல நெறிகளைக் காண்பிக்காத தெய்வ வழிபாடு துன்பம் தரும் நரகத்தில் புகச்செய்யும். அவ்வாறு வீழ்ந்தவரை பிற தெய்வங்கள் தாங்கா!. தாணு என்றால் தூண். திருஅரத்துறையில் வீற்றிருக்கும் இறைவனோ தன்னை வழிபடுபவர்களின் துயரங்களைத் தூணெனத் தாங்குகிறான். அருள் செய்கிறான்.

திருவிட்டுறை என்று வழங்கப்படும் இவ்வூர் நிவா என்ற நதிக்கரையில் உள்ளது. சம்பந்தருக்குச் சிவபெருமான் முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் கொடுத்த தலம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment