26 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாண்டிக் கொடுமுடி
                                          - துன்னியருள் 
வேண்டிக் கொடுமுடியாம் மேன்மைபெறு மாதவர்சூழ்
பாண்டிக் கொடுமுடியின் பண்மயமே -

இறைவனை அருள்செய வேண்டுமென்று வேண்டிக் கொண்டு , அதனைப் பெற்று, மேன்மை அடைந்த மிக்க தவமுடையவர் சூழ்ந்து விளங்கும் சிறப்பு மிக்கவன் இசை மயமாய் விளங்கும் கொடுமுடி ஆண்டவன்.

இத்தலம் காவிரியின் தென் கரையில் உள்ளது. காவிரி இங்கு வளைந்து ஓடுவதால் கொடுமுடி. ஈரோட்டிலிருந்து 40 கி.மீ தூரம்.சுந்தரர் நமச்சிவாயத் திருப்பதிகம் பாடியருளிய தலம். 'திரிமூர்த்தித் தலம் '

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


No comments:

Post a Comment