4 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திரு அகத்தியான் பள்ளி, திருக்கோடிக் குழகர்

                                       - நாடுமெனை
நின் அகத்தி யான்பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட
தென்னகத்தி யான்பள்ளிச் செம்பொன்னே -தொன்னெறியோர்
நாடிக் குழக நலம் அருள் என்று ஏத்துகின்ற
கோடிக் குழகர் அருள் கோலமே -

என்னை நாடி வந்த,  'நின் அகத்தில் யான் பள்ளி கொண்டேன்' என்று ஆட்கொண்டவன்
அகத்தியான் பள்ளியில் கோயில் கொண்டுள்ள செம்பொன்னாய் ஒளிவீசும் திருமேனிச் சிவன்.
தொன்மையான நல்ல நெறிகளைப் பின்பற்றும் சான்றோர் இறைவனை நாடி,''குழகனே நலம் அருள்''
என வேண்டி வழிபட அவர்களுக்கு அருட் கோலத்துடன் காட்சிதரும் குழகன் சிவன்.
(குழகன் -இளைஞன், அழகன், முருகக் கடவுள்)
அகத்தியான் பள்ளியில் அகத்தியர் இறைவனின் திருமணக் கோலத்தைக் காண தவம் செய்தார்.
கோடிக்கரையில் உள்ள இறைவர் ஆதலின் 'கோடிக்குழகர்.'
இவ்விரு கோயில்களும் அருகருகே உள்ளன.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment