19 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநெல்வேலி

                                                 -பொற்றாம 
நல்வேலி சூழ்ந்து நயன்பெறுமொண் செஞ்சாலி
நெல்வேலி உண்மை நிலயமே -

செஞ்சாலி - உயர்ந்த நெல்வகை.பொன்+ தாமம் - பொன் மாலை.
தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள திருநெல்வேலி எங்கெங்கு நோக்கினும் உயர்ந்த நெல்விளையும் வயல்களால் சூழப்பெற்றது.  நெற்பயிர் முதிர்ந்து வயல் வரப்புகள்  பொன்னால் கட்டப்பட்ட மாலையைப் போல் காட்சி தருகிறது. இங்கு சத்தியத் திரு உருவமாய்க் காட்சியளிக்கிறார் நெல்லையப்பர்.

பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிர சபை உடைய தலம். தம்முடைய நைவேத்யத்திற்காக வேதசர்மா என்னும் பிராமணர் யாசித்துக் கொண்டு வந்து உலர்த்தி வைத்திருந்த நெல்லை வெள்ளம் அடித்துக் கொண்டு போகாது வேலி கட்டிக் காத்து அருளியதால் இத்தலம் திருநெல்வேலி  எனப்படுகிறது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி  

                                   

No comments:

Post a Comment