10 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவேடகம்
                                   - வானவர்கோன்
தேமே டகத்தனோடு சீதரனும் வாழ்த்தும்சீர்
ஆமேட கத்தறிவா னந்தமே -

வானவர் தலைவனான இந்திரனும், ஆட்டு வாகனத்துக்கு உரியவனான முருகப் பெருமானும்,
சீதரனான திருமாலும் வாழ்த்தும் சிறப்பு மிக்க திருவேடகம் என்னும் ஊரில் அறிவானந்த மயமாய் வீற்றிருக்கும் இறைவனே உம்மை வணங்குகிறேன் என்றவாறு.

இவ்வூர் வைகைக் கரையில் உள்ளது. சம்பந்தர் சமணர்களுடன் வாதிட்டபோது ,''வாழ்க அந்தணர்,'
என்ற பதிக ஏட்டை வைகையில் இட அது நீரை எதிர்த்துச் சென்றது. பின்னர் 'வன்னியும் மத்தமும்' என்ற பதிகம் பாடியதும் அந்த ஏடு இத்தலத்தில் ஒதுங்கி நின்றதால் திரு ஏடகம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment