12 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்புத்தூர்
                                      - முற்றுகதி
இத்தூரம் அன்றி இனித்தூரம் இல்லைஎனப்
புத்தூர் வருமடியார் பூரிப்பே -

மிகுந்த மகிழ்ச்சியினால் வரும் மன நிறைவுதான் பூரிப்பு! இந்த பூரிப்பைத் தருபவன் திருப்புத்தூர் இறைவன். யாருக்கு இந்த நிறைவைக் கொடுக்கிறான்? தன்னை நாடி வரும் அடியார்களுக்கு!
எதற்காகக் கொடுக்கிறான்? 'உன்னை நாடி, வந்து விட்ட எங்களுக்கு இனி பிறவாத மோட்சகதி கிடைக்க வெகுதூரம் இல்லை,' என்று நம்பிக்கையோடு வருவதால் கொடுக்கிறான்.
இறைவனை நாடி வணங்குவோருக்குத் துயரம் இல்லையன்றோ?

இவ்வூர் புதுக்கோட்டை மதுரை சாலையில் உல்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment