23 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருகொடிமாடச் செங்குன்றூர்

                                        - செம்மையுடன்
அங்குன்றா தோங்கு மணிகொள் கொடிமாடச்
செங்குன்றூர் வாழும்சஞ் சீவியே -

கொடிமாடச் செங்குன்றூரில் நெடிது வாழச் செய்யும் சஞ்சீவி மருந்தாய் சிறந்த அழகு குறையாமல் அருள் செய்து வரும் சிவபெருமானை வணங்குகிறேன்.

திருச்செங்கோடு, நாமகிரி  என்று வழங்கப்படும் இத்தலம் சங்கரி துர்க்கம் புகை வண்டி நிலையத்திலிருந்து ஆறு கல் தொலைவில் உள்ளது. அர்த்தநாரித் தலம். 1200 செங்குத்தான படிகளை ஏறினால் மலைஉச்சிக்குச் செல்லலாம். முருகப் பெருமானுக்கு உகந்த தலம். அருணகிரிநாதரின் பாடல் பெற்ற தலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment