9 December 2013

திருப்பரங்குன்றம் -முருகன் பாடல்



திருப்பரங்குன்றம்
                                 -மாப்புலவர்
ஞானபரங் குன்றம்என நண்ணிமகிழ் கூர்ந்தேத்த
வானபரங் குன்றிலின்பா னந்தமே -

மிகச் சிறந்த  புலவர்கள் கூடி, ' ஞானமயமான பரங்குன்றம் என்று  மகிழ்ச்சியோடு
போற்றும்' திருப்பரங்குன்றம்! இம்மலைமேல் இன்பம்தரும் ஆனந்த வடிவினனாகி
அருள் செய்கிறான் இறைவன். இங்கு இறைவன் பெயர் பரங்கிரிநாதர். இறைவி
ஆவுடைநாயகி.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
ஆலவாய் அழகனை,'சொக்கழகானந்தமே' என்றும், ஆப்பனூர் சிவனை,'சதானந்தமே,'
என்றும் போற்றியவர் பரங்குன்றத்து இறைவனை 'இன்ப ஆனந்தமே,' எனக் கூறி
மகிழ்கிறார்.
இன்பம்- இனிமை தருவது!(sweetness)
ஆனந்தம் - பேரின்பம், பெரு மகிழ்ச்சி!

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி



No comments:

Post a Comment