7 December 2013

மந்திரமாவது நீறு




திருஆலவாய் - மதுரை

                                   - ஓதுகின்றோர்
பாலவாய் நிற்கும் பரையோடு வாழ்மதுரை
ஆலவாய் சொக்கழகா னந்தமே -

மதுரைமாநகரில் சிவபெருமான் சொக்கலிங்கனாய், சொக்க வைக்கும் அழகனாய், ஆனந்தமாய்
அருள் செய்கிறான். ஞானநூல்களை ஓதுபவரிடம் கருணை கொண்டு ஆதரிக்கும் பரையாகிய
மீனாட்சியம்மையோடு வாழும் ஆலவாய் அழகனை வணங்குவோம்.
பரை - உமையம்மை

மதுரை  அன்னை மீனாட்சியம்மை சமேதர சோமசுந்தரப் பெருமாள் திருக்கோயில் புகழ் பெற்ற கோயிலாகும்.திருஞானசம்பந்தர் சமண சமயத்தைத் தழுவியிருந்த கூன் பாண்டியனின் சுர நோயை
'மந்திரமாவது நீறு' என்ற திருநீற்றுப் பதிகம் பாடித் தீர்த்தருளினார்.
பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

1 comment: