21 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

கொங்குநாடு - அவிநாசி - திருப்புக்கொளியூர்

                                          - நெஞ்சடக்கி
ஆன்று நிறைந்தோர்க்கு அருள் அளிக்கும் புக்கொளியூர்த்
தோன்றும்அவி நாசிச் சுயம்புவே - 

ஊர் பெயர் திருப்புக்கொளியூர். இறைவன் அவிநாசி லிங்கேஸ்வரர். அவிநாசி என்றால் நாசங்களை நீக்கும் தலம் என்று பொருள். கோயம்புத்தூரிலிருந்து  35 கி.மீ. தொலைவில் உள்ளது.

அவிநாசியப்பனான சுயம்பு மூர்த்தி அருள் செய்யும் தலம் திருப்புக்கொளியூர்.
மனதை அடக்குவது என்பது மிகவும் கடினமானது என்பதை அனைவரும் அறிவோம். புலனடக்கம் உள்ளோராலேயே அது முடியும். நெஞ்சடக்கும் சான்றோர்க்கு அருள் அளிப்பவன், தீய குணங்களை நாசம் செய்பவன் அவிநாசிச் சிவபெருமான்.

திருவருட்பிரகாச வள்லலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment