30 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கைச்சினம்

                                    - நையுமன
மைச்சினத்தை விட்டோர் மனத்தில் சுவைகொடுத்துக் 
கைச் சினத்தின் உட்கரையாக் கற்கண்டே-

வாயில் இட்டால் கரையாத கற்கண்டு எனும் இனிப்புக் கட்டி இவ்வுலகில் எங்கேனும் கிடைக்குமா?
ஆம் கிடைக்கும்!
இதயத்தில் சிவமாகிய, கரையாத கற்கண்டின் அருளைச் சுவைக்க வல்லாருக்கு எப்போதும் இன்பமே!
மனிதனின் தரத்தைக் குறைக்க வல்லது சினமெனும் குணம்! 'தன்னைத்தான் காக்கின் சினம் காக்க' என்கிறது வள்ளுவம். தன்னிலை இழக்கும்போது சினம், பல பாதகங்களுக்குக் காரணமாகிறது.
எனவே மனதில் எழும் குற்றமான சினத்தைக் கைவிட்டவர்களுடைய இதயத்தில் கற்கண்டின் சுவையாய் இன்பம் தரும் சிவம். திருக்கைச் சினம் எனும் ஊரில் கரையாத கற்கண்டாய் இன்பம் அளிக்கிறான் சிவபெருமான்.
கச்சனம் என்றும் அழைக்கப்படும் இவ்வூர் திருவாரூர்- திருத்துறைப்பூண்டிச் சாலையில் உள்ளது.
இங்கு இந்திரன் மணலினால் லிங்கம் அமைத்துப் பூசித்து, அதனைக் கையினால் எடுத்து அப்புறம் வைக்கும் பொழுது அவனுடைய கைவிரல்கள் சின்னமாக அதில் பதிந்ததால் இறைவன் கைச்சி னநாதர்  என அழைக்கப்படுகிறார்.தலம்  கைச்சின்னம். சினமாகிய குணத்தை விட்டொழித்தால்,
கைச்சின்னநாதர் அருள் பொழிவார். ஓரெழுத்தில் விளையாடும் இன்பத்தமிழ்!

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி



No comments:

Post a Comment