25 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநாட்டியத்தான்குடி

                                   - எல்லைக்கண்
சேட்டியத்  தானேதெரிந்துசுரர்  வந்தேத்தும்
நாட்டியத் தான்குடிவாழ் நல்லினமே -

சேட்டியம்- படைத்தல், காத்தல், அழைத்தல் ஆகிய முச்செயல்களையும் செய்தலும், செய்விப்பதும் ஆகும்.
உலகம் அழியும் ஊழி முடிவின் போது (முச்செயல்களையும் )செய்கிறார் இறைவன்.உலகத்து உயிர்களை ஒழுங்கு படுத்துவதன் முதன்மை அறிந்து தேவர்கள் வந்து திருநாட்டியத்தான் குடியில் கோயில் கொண்டிருக்கும்  சிவபெருமானை வணங்குகின்றனர்.

இவ்வூர் மாவூர் புகை வண்டி நிலையத்திலிருந்து 6 கி.மீ. தெற்கில் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment