24 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநெல்லிக்கா

                                                - ஓங்குமலை
வல்லிக்காதார மணிப்புயவென்று அன்பர் தொழ
நெல்லிக்கா வாழ்மெய்ந் நியமமே -

ஓங்கி நெடிதுயர்ந்த மலையரசனின் மகளான உமையம்மைக்கு ஆதாரமாகத் தன் அழகிய மணித் தோள்களை அளித்தவன் என்று அன்பர் தொழ திருநெல்லிக்கா என்னும் திருப்பதியில் மெய்ப்
பொருளான இறைவன் வாழ்கிறான்.

நெல்லி மரங்கள் சூழ்ந்த சோலையாக இருந்ததால் நெல்லிக்கா என்று பெயர் வந்தது. திருநெல்லிக்காவல் என்றும் வழங்கப்படுகிறது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment