26 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்காறாயில்

                          - நாட்டுமொரு
நூறாயில் அன்பர்தமை நோக்கி அருள்செய் திருக்
காறாயின் மேலோர் கடைப்பிடியே -

ஆராய்ந்து பார்க்கும் போது நூல்கள் சொல்லும் செய்தி என்ன?
தன்னை வழிபடும் அன்பர்களைத் தாய் போலக் கருணையுடன்
பார்த்து இறைவன் அருள் செய்வான் என்பதாகும்.
( அன்பர் தமைத் தாய் போல் நோக்கி)
 இதனை உணர்ந்து தன்னை வழிபடும் அன்பர்களுக்கு
 திருக்காறாயிலில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான்
 அருள்புரிகிறான்.

இவ்வூர் திருக்காறாவாசல் என அழைக்கப்படுகிறது.
ஆதி விடங்கத் தலம்.நடனம் குக்குட நடனம். மரகத
லிங்கம் சிறப்பு.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment