21 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

பேரெயில்
                              -வெள்ளிடைவான்
வாம்பேர் எயில்சூழ்ந்த மாண்பால் திருநாமம்
ஆம்பேர் எயில்ஒப்பி லாமணியே -

வானவாம் பேரெயில் - வானத்தைத் தொடத் தாவும் பெரிய மதில் சுவர்.
'வாவும்' என்பது 'வாம்' என விகாரப்பட்டது. எயில்- கோட்டைச் சுவர்.

ஆகாயப் பெரு வெளி! கீழே பார்த்தால் வானைத் தொடத் தாவும் பெரிய மதில்சுவர்.
இத்தகைய பெரிய மதில் சுவரால் சூழப்பட்டிருக்கும் பெருமையுடைத்து பேரெயில்
எனும் இவ்வூர்.  இவ்வூரின் திருக்கோயிலில் எதனோடும் ஒப்பிடுவதற்கு அரியவரான
சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். வானளாவிய மதிற்சுவரால்
பேரெயில் எனும் பெயர் வந்தது.
இவ்வூர் 'ஓகைப்பேரையூர்' எனவும் வழங்கும்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


No comments:

Post a Comment