20 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவெண்டுறை

                                          - தென்கூட்டிப்
போய்வண்டு உறைதடமும் பூம்பொழிலும் சூழ்ந்தமரர்
ஆய்வெண் டுறைமாசி லாமணியே -

 இனிமையாக ரீங்காரம் செய்யும் வண்டுகள் வசிக்கும் நீர் நிலைகள், மலர்ச்சோலைகள் சூழ்ந்த அழகிய திருவெண்துறையில் வீற்றிருக்கும் மாசு இலா மணியான  இறைவனைத் தேவர்கள் வணங்குவர்.

திருக்கொள்ளம்பூதூர்

                             - தோய்வுண்ட
கள்ளம்பூ தாதிநிலை கண்டுணர்வு கொண்டவர் சூழ்
கொள்ளம்பூ தூர்வான் குலமணியே -

பூதங்களை அடிப்படையாகக் கொண்டதத்துவக் கூறுகளில் தோய்ந்துள்ள பொய்மையை  உணர்ந்த,
மெய்யுணர்வு கொண்டவர்கள் திருக்கொள்ளம்பூதூர் குலமணியை வணங்குவர்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


  

No comments:

Post a Comment