22 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கொள்ளிக்காடு
                                       - தாம்பேரா
வீட்டிலன்பர் ஆனந்தம் மேவச் செயும் கொள்ளிக்
காட்டில் அம்ர்ந்த என்கண் காட்சியே -

பேரா வீடு -நிலையான பேரின்ப வீடு, பெயர்தல் அற்றது.
நிலையான பேரின்ப வீட்டில் என்ன கிடைக்கும்? எப்பொழுதும் அனுபவிக்கக் கூடிய சிவானந்தம் கிடைக்கும்!
 தரிசனம் செய்யும் கண்களுக்கு ஆனந்தம் நல்கும் சிவபெருமான் திருக்கொள்ளிக்காடு எனும் பதியில் அமர்ந்து, அடியார்களை நிலையான பேரின்பம் அனுபவிக்கச் செய்கிறான்.

கள்ளிக்காடு என்று வழங்கப்படுகிறது. அக்னி வழிபட்ட தலம் என்பதால் கொள்ளிக்காடு எனப் பெயர் பெற்றது. இங்கு சனிபகவான் சன்னதி சிறப்பு.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment