29 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவலிவலம்

திருவாரூருக்குத் தென்கிழக்கில் உள்ள இத் தலத்தை,        
''தொண்டனேன் அறியாமை அறிந்து
கல்லியல்  மனத்தைக் கசிவித்துக் கழலடி
காட்டி என் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்க நின்றானை
வலிவலம் தனில் வந்து கண்டேனே'' என்று சுந்தரர் மனம் உருகிப் பாடியுள்ளார்.
மாடக்கோயில் வலியன் என்ற கரிக்குருவி வழிபட்டதால் வலிவலம் என்று பெயர். மூவர் பாடல் பெற்ற இத்தலத்தை வள்ளல் பெருமானர் என்ன சொல்லிப் பாடுகிறார்?

                                   - துன்றாசை
வெய்ய வலிவலத்தை வீட்டியன்பர்க்கு இன்னருள் செய்
துய்ய வலிவலத்துச் சொல்முடிபே -

மனித மனம் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசைகளால் நிறைந்து கிடக்கிறது. இந்த
ஆசைகள் வலிமையானவை. மனிதனை வீழ்த்தும் தன்மையுடையவை. இவ்வாசைகளை எல்லாம்
'வீட்டி' (அழித்து) அன்பர்களுக்கு இன்னருள் செய்து அருள் மயமாய் விளங்குகிறான் திருவலிவலத்து
சிவபெருமான்.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் -அருட்பெருஞ் சோதி


No comments:

Post a Comment