31 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருஇன்னம்பர்

                                        - இட்டமுடன்
என்னம்பர் என்று அயன்மால் வாதுகொள
இன்னம்பர் மேவிநின்ற என் உறவே -

திருமாலும், நான்முகனும் மிகுந்த விருப்பத்தோடு என்சிவ பெருமான் வீற்றிருக்கும்  கோயில் என வாது செய்கிறார்களாம். இத்துணை சிறப்பு வாய்ந்த இன்னம்பர் என்ற பதியில் எழுந்தருளிய்இருக்கும் என் உறவே! சிவனே உம்மை வணங்குகிறேன்.

இவ்வூர் கொட்டையூருக்கு மேற்கில்  உள்ளது. அகத்தியரும், ஐராவதமும் வழிபட்ட தலம். அகத்தியர் இங்கு இலக்கண உபதேசம் பெற்றார். அப்பர், சம்பந்தர் பதிகங்கள் உள்ளன.
இறைவன் : எழுத்தறிநாதேஸ்வரர்
இறைவி    : கொந்தார் பூங்குழலம்மை
தலமரம்      : பலா

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment