3 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநீடூர்

                        உருப்பொலிந்தே -
ஈடூரிலாதுயர்ந்த ஏதுவினால் ஓங்குதிரு
நீடூர் இலங்கு நிழல் தருவே -

அழகிய தோற்றத்தால், எதனோடும் ஒப்பிடமுடியாத மேன்மையுடைய
திருநீடுரில் பக்தர்களுக்கு அருள் செய்யும் குளிர்ச்சி பொருந்திய
நிழலளிக்கும் சிவமே !

நீடூர் புகை நிலையத்துக்கு 1 1/2கிலோ.மீ. தொலைவில் உள்ளது இப்பதி.
முனையடுவார் நாயனார் சிவத்தொண்டு செய்து முத்தி பெற்ற தலம். காவிரி
மணலைப் பிடித்து வைத்து இந்திரன் பூசித்த லிங்கம். இது இறுகி வெண்மை
நிறமாக மாறியது.

இறைவன் : அருள் சோமநாதேஸ்வரர்
இறைவி    : வேயுறு தோளியம்மை
தலமரம்    : மகிழமரம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா

No comments:

Post a Comment