28 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்சேய்ஞலூர்

                                              -  ஏழ்புவிக்குள்
வாய்ஞ்ஞலூர் ஈதே மருவ என வானவர் சேர் 
சேய்ஞ்ஞலூர் இன்பச் செழுங்கனியே -

ஏழு உலகங்களிலும் சிறந்து, நாம் வந்து வழிபட ஏற்ற நல்ல ஊர் இதுவேயாகும் என வானவர்கள்
வந்து வழிபடும் சேய்நல்லூர்ச் சிவனே உன்னை வணங்குகிறேன்.

வாய்ஞ்ஞலூர் - வாய்ந்த நல்லூர். இவ்வூர் சேய்ஞல், சேங்கனூர்,சண்டேஸ்வரபுரம், குமாரபுரி, சத்தியகிரி எனவும் வழங்குகிறது. வைணவப் பெரியவர் பெரியவாச்சான் பிள்ளை அவதரித்த தலம்.அரிச்சந்திரன், சிபி வழிபட்டதலம்.சூரனை அழிக்க வந்த முருகப் பெருமான் இத்தலத்தில் சிவனை வழிபட்டு சர்வ சங்கார படைக்கலத்தைப் பெற்றார். சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.
இறைவன் : சத்தியகிரீஸ்வரர்
இறைவி    : சகிதேவியம்மை
தீர்த்தம்     : மண்ணியாறு

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment