10 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்குரக்குக் கா

                                                       - மிக்கதிரு
மாவளரும்  செந்தா மரைவளரும் செய்குரக்கு
காவளரும் இன்பக் கன சுகமே -

(மிக்க திருமா) செல்வத்துக்கு அதிபதியாகிய திருமகள் எழுந்தருளும்
செந்தாமரை மலர்கள் மலரும் வயல்கள் உள்ளன. (குரக்குக் கா) குரங்குகள்
நிறைய வாழும் சோலைகள்  நிறைந்துள்ள ஊர் இது. இத்தலத்தில் மேலான
இன்பம் வளர்த்து ஆன்ம சுகத்தைச்,  சிவபோகத்தைத் தரும் சிவம்!

இவ்வூர் வைத்தீஸ்வரன் கோயிலுக்குத் தெற்கில் 10 கி.மீ தொலைவில் உள்ளது.
தற்போது 'திருக்கரக்காவல்' என அழைக்கப்படுகிறது.

இறைவன் : கொந்தளேஸ்வரர்
இறைவி    :  கொந்தளநாயகி
தீர்த்தம்     :  கணபதிநதி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

அப்பர் தேவாரம் - உடம்பெனு மனைய கத்து உள்ளமே தகளி யாக
                               மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி
                               இடம்படு ஞானத் தீயா லெரிகொள இருந்து நோக்கில்
                               கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.
உடம்பெனும் வீட்டில், உள்ளமே அகலாக,உணர்வாய நெய் விட்டு, உயிரெனும் திரியிட்டு, ஞானத் தீயாகிய தீபம் ஏற்ற கடம்பணிந்த, கந்தப் பெருமானின் 'தாதை கழலடி'  தரிசனம் பெறலாம்.


No comments:

Post a Comment