5 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவேள்விக்குடி

                                    -  மன்னர்சுக
வாழ்விக்   குடிகளடி மண்பூச லால் என்னும்
வேழ்விக்   குடியமர்ந்த  வித்தகனே -

மன்னர் சுக வாழ்வு இக்குடிகள் அடிமண் பூசலால் - நாட்டை ஆளும் மன்னர்களுடைய சுக வாழ்வு
உழவர்கள் மண்ணை நன்றாக உழுது, புழுதியாய் உலர்த்தி நீர் பாய்ச்சி எருவிட்டுக் காத்து விளைத்தலால்தான். இந்த உண்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் திருவேள்விக் குடியில் வீற்றிருக்கும் யாவற்றிலும் வல்லவனான சிவபெருமானே உம்மை நமஸ்கரிக்கிறோம்.

இத்தலம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது.இங்கு சிவபெருமான் திருமணக்கொஒலத்தில் காட்சியளிக்கிறார்.

இறைவன் : கல்யாணசுந்தரேஸ்வரர்
இறைவி : மங்கையர்க்கரசி

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா  

No comments:

Post a Comment