7 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமணஞ்சேரி

                                               - நண்ணும்
வணஞ்சேர் இறைவன் மகிழ்ந்து வணங்கும்
மணஞ்சேரி நீங்கா மகிழ்வே -

திருமணஞ்சேரி என்ற இப்பதியில் எழுந்தருளி அனைவருக்கும் ஆனந்தம் நல்கும்  இறைவனே,
உன் திருவருள் தனக்கு கிடைக்குமாறு அரசனும் உள்ள மகிழ்வோடு வந்து வணங்கும்
சிறப்புடைய உனக்கு நமஸ்காரம்.

மயிலாடு துறையிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் செல்கின்றன.
இங்கு ஈஸ்வரர் கல்யாணசுந்தரர் வடிவம் கொண்டு கோகிலாம்பிகையைத்
திருமணம் செய்து கொண்டார். எனவே இப்பெயர் பெற்றது. திருமணம்
தடைப்படுபவர்கள் இங்கு வந்து வணங்கினால் விரைவில் திருமணம் நடை
பெறும் என நம்புகிறார்கள்.
ராகு தோஷம் உடையவர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.சம்பந்தர், அப்பர்
பதிகங்கள் உள்ளன.

இறைவன் :அருள்வள்ளல்நாதர்
இறைவி    :கோகிலாம்பாள்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா



1 comment: