2 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்புன்கூர்

                                         - ஒன்றிக்
கருப்புன்கூர் உள்ளக் கயவர் நயவாத்
திருப்புன்கூர் மேவும் சிவனே -

கயவர்கள் மனம் ஒன்றி தாயின் கருப்பையில் மீண்டும் மீண்டும் வசித்துப் பிறவியெடுக்க விரும்புவர். அவர்கள்  திருப்புன்கூரிலே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானை வணங்கி மீண்டும் பிறவாத மேல் நிலையை அடைய விரும்ப மாட்டார்கள்.
மீண்டும் பிறவா வரம் அருள்வாய் சிவனே! உன்னை வணங்குகிறேன்.
(கரு+புன்கு+ஊர் --கருப்புன்கூர்- கருத்தங்கும் அற்பமான ஊர்.)

வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் உள்ளது.
நந்தனார்( திருநாளைப் போவார்) வணங்குவதற்காக ஈஸ்வரன் நந்தியைச் சற்று
விலகி இருக்க அருள் செய்த தலம். தரிசனம் செய்த நந்தனார் கோயிலின் மேற்குப்
புறம் உள்ள ரிஷப தீர்த்தத்தை வெட்டிச் சீர்படுத்த எண்ணிய பொழுது தனக்கு உதவ
ஒருவரும் இல்லையே என ஈசனை வேண்டினாராம். ஈசனும் அவருக்கு உதவ கணபதியை
அனுப்பினாராம். இப்படி வெட்டப்பட்ட குளம் இன்று கணபதி தீர்த்தம் என்றும்,விநாயகர்
'குளம் வெட்டிய விநாயகர்' என்றும் வழங்கப்படுகிறார்கள்.
இறைவர் :சிவலோகநாதர்
இறைவி  :சொக்கநாயகிஅம்மை
தலமரம்   : புங்கமரம்
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா 


No comments:

Post a Comment