12 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பழமண்ணிப்படிக்கரை

                                                 - தாழ்வகற்ற
நண்ணிப் படிக்கரையர் நாடோறும் வாழ்த்துகின்ற
மண்ணிப் படிக்கரைவாழ் மங்கலமே -

உள்ளத்துக் கீழ்மைக் குணங்களை நீக்க வேண்டி படிக்கரை என்ற இவ்வூரின் பொலிவுக்குக் காரணமாய் விளங்கும் உன்னை இங்கு  வாழ்கின்ற மக்கள் நாள்தோறும் நாடி வந்து வாழ்த்திப் பாடுகின்றனர்.

தற்பொழுது இவ்வூர் 'இலுப்பைப்பட்டு' என்று வழங்கப்படுகிறது. சித்திரைப் பவுர்ணமியில்
பாண்டவர்கள் இங்கு வந்து பஞ்சலிங்கங்களை ஸ்தாபித்து வழிபட்டதாக கூறப்படுகிறது.
சுந்தரர் பதிகம் ஒன்றுள்ளது.

இறைவன் : நீலகண்டேஸ்வரர்
இறைவி    : அமிர்தவல்லியம்மை
தலமரம்     : இலுப்பை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா


No comments:

Post a Comment