20 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கஞ்சனூர்

இத்தலம் கல்லணை - பூம்புகார் சாலையில் கோட்டூர் அருகில் உள்ளது. கோட்டூர் கஞ்சனூர் எனப்படும்.
இந்தத்தலத்தில் 1. பிரமனுக்கு இறைவன் திருமணக்காட்சி தந்தார்.
                           2. பராசரருக்குச் சித்தப்பிரமையைப் போக்கினார்.
                           3. அக்கினிக்கு ஏற்பட்ட சோகை நோயைத் தீர்த்தார்.
                           4. சந்திரனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கியது.
நவக்கிரகத் தலங்களில் சுக்கிரனுக்குரிய தலம் இது. சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து
பரிகாரம் செய்து கொள்ளலாம். இங்கு கொடி மரத்தை அடுத்துள்ள நந்தி புல் அருந்திய நந்தி
என்று சிறப்புப் பெயர் பெற்றது. 'நமசிவாய' என்ற பஞ்சாட்சர மந்திர மகிமைக்கு எடுத்துக் காட்டாக
உள்ள தலம்.

மானக்கஞ்சாற நாயனாரும், ஹரதத்த சிவாச்சரியாரும் அவதரித்த தலம்.
அப்பர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

(19 தேதியிட்ட பதிவிலுள்ள திருக்கஞ்சனூர் பற்றிய விவரங்கள் மட்டும் கொடுக்கப் பட்டுள்ளன)
                           

No comments:

Post a Comment