9 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கருப்பறியலூர்

                                                                     - ஓரட்ட
திக்கும் கதிகாட்டிச் சீர்கொள்திருத் தொண்டருளம்
ஓக்கும் கருப்பறிய லூரரசே -

(அட்ட திக்கு) எட்டு திசைகளிலும் உள்ள மனிதர்கள் எல்லோருக்கும் நல்ல
வாழ்க்கை தந்து, சிறப்புமிக்க தொண்டர்களின் நல்ல உள்ளம் போல் வளம்
பொருந்திய கருப்பறியலூரில் வீற்றிருக்கும் அருள் அரசே.

இவ்வூர் 'தலைஞாயிறு' என்று அழைக்கப்படுகிறது. கன்மநாசபுரி, மேலைக்காழி, ஆதித்யபுரி, முல்லைவனம், யூதிகாவனம் என்ற பெயர்களும் உண்டு.

இறைவன் : குற்றம் பொறுத்த நாதர்
   இறைவி : கோல்வளை அம்மை
   தலமரம்  : கொடிமுல்லை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா

No comments:

Post a Comment