30 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கொட்டையூர்

                                                           -  அயலாம்பல்
மட்டையூர் வண்டினங்கள் வாய்ந்து விருந்து கொளும்
கொட்டையூருள் கிளரும் கோமளமே -

கொட்டையூர் எனும் திருத்தலத்தில்  அன்பர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம்
அழகே உருவாய் எழுந்தருளியிருக்கிறார் சிவபெருமான். அவ்வூரில் நிறைய நீர் நிலைகள் உள. அவற்றில் ஆம்பல் மலர்கள் பூத்துள்ளன. இந்த ஆம்பல் மலர்களின் இதழிலே அமர்ந்து ஊர்ந்து
சென்று அதிலுள்ள தேனை விருந்தாக வந்த மற்ற வண்டினங்களுடன் கூடி உண்ணும் சிறப்பு
வாய்ந்தது.

இவ்வூர் கும்பகோணத்திலிருந்த்உ திருவையாறு செல்லும் சாலையில் உள்ளது. வில்வாரண்யம்,
ஏரண்டபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆமணக்குச் செடியின்கீழ் லிங்கம் வெளிப்பட்டதால்
கொட்டையூர் எனப்படுகிறது. சோழ மன்னன் ஒருவனுக்கும், ஏரண்ட முனிவருக்கும் கோடிலிங்க
மாக இறைவன் காட்சி அளித்ததால் ஈஸ்வரன் கோடீஸ்வரன் எனவும், கோயில் கோடீச்சுரம்
எனவும் வழங்கப்படுகிறது. இங்கு மார்க்கண்டேயர் வழிபட்டுள்ளார். அப்பர் பதிகம் ஒன்றுள்ளது.

இறைவன் : கோடீஸ்வரர்
இறைவி    : பந்தாடுநாயகி அம்மை
தலமரம்     ஆமணக்கு.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

திருச்சிற்றம்பலம் 


No comments:

Post a Comment