27 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாய்ப்பாடி

                                                  -  தினந்தாளில்
சூழ்திருவாய்ப்  பாடியங்குச் சூழ்கினுமா மென்றுலகர்
வாழ்திருவாய்ப்  பாடி இன்ப வாரிதியே -

'தினமும் தாளில் சூழ் வந்து வாயால் பாடிச் சூழ்கினும்,' பூமி மீது கால் பதிந்து நடவாத இலக்குமி தேவியும், வாயால் பாடி, காலால் நடந்து வருவதற்குரிய இடம் என்று உலகர் போற்றும் திருவாப்
பாடியில் இன்பமயமாக வீற்றிருக்கும் எம்பெருமானே உம்மை வாழ்த்தி வணங்குகிறேன்.

இவ்வூர் கும்பகோணம் - திருப்பனந்தாள் சாலையில் உள்ளது.

இறைவன் : பாலுகந்தநாதர்
இறைவி    : பிருகந்நாயகி
தலமரம்     : ஆத்தி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment